Thursday, September 11, 2014

ஸ்ரீ ராமனின் குண நலன்கள் :

 சீதையிடம் ..... ஆஞ்சநேயர்  கூறியது ..



அசோகவனத்தில்' சீதையையைத்  தேடி  ஸ்ரீ ஆஞ்சநேயர்  சென்று , துயரிலிருந்த  அன்னைக்கு  நம்பிக்கை  அளிக்கும்  வண்ணம்  பேசும்போது  
அண்ணலின்  குண நலன்களாகக்  கூறியது .....

இந்த  உலகத்தில்  எது ..எது ?   மரியாதைக்கு  உரிய , நன்மைகள்  நல்கும்  தர்மங்கள்  உண்டோ .....அது  அத்தனையும்   தான்  முன்னின்று  செய்பவன்  ....மற்றவரை  செய்விப்பவனும்  ஸ்ரீ ராமன்.  தான்  தர்மத்தை  செய்வதில்  முதன்மையனவனாகவும் ...........மற்றவர்கள்  அந்த  தர்ம  வழியில்  நடக்கிறார்களா ....என  கவனிப்பவனாகவும், எப்போதும்  ஆனந்தம்  தருபவனாகவும் ........தன்னைச்   சரணடைந்தவர்களின்  துன்பத்தை  உடனே  நீக்குவதற்கு  துடிப்பவன்  ஸ்ரீ ராமன்.  

மற்றவர்களே  முதலில்  பேசவேண்டும்  என்று  இல்லாமல் .....தானே  முன்வந்து  மற்றவர்களின்  நலனை  விசாரிப்பவன்  .......மற்றவர்களின்  துக்கத்தில்  தானே  முழுதும்  துன்பமேற்பவன்!   கருணையே  பொங்கும்
கண்களை  உடையவன்.   

ஒருநாள்  எம்பெருமானின்  திருமுகத்தைக்  கண்ணுற்றவர்களையும் , தன்னையே  சுற்றிச்சுற்றி  வரவைக்கும்   தூய  வடிவினன்.  சத்தியத்தின்  வடிவமே  ஆனதால்  கேட்பவருக்கு  சாந்தி  அளிக்கும்  கம்பீரக்  குரலுடையவன் .....மிதமாக ....இதமாக ......குறைவாக ....... பேசுபவன். எதையும்  பிறரிடம்  வேண்டாதவன் .....  தன்னிலேயே  திருப்தியுடையவன் !



"யாரைப்  பார்த்தால்  என்பு  உருகி  அன்பு  பெருகுகிறதோ  அவரே  பிரம்மம்  என  அறிவாய் !." ....என  பிரம்மா   எனக்கு  கூறியிருந்தார் ......ஸ்ரீ ராமனை  பார்த்த  முதல்  சந்திப்பிலேயே  ......அந்த  நொடியிலேயே  ........அவரே  பரப்பிரம்மம்  என  அறிந்தேன் !

மேலும்  துன்பத்தை  நீக்கி ......எம உலகம்  உயிர்கள்  செல்லாமல் .....காத்து  ரட்சிக்க  வந்த  ஈஸ்வரனே .........ஸ்ரீ ராமர் !

                                                                                                       சுந்தர காண்டம் 


குறிப்பு :  
                         நண்பர்களே !   இதை  படிக்கும்போது  ......சிறுவயதில்  இருந்தே  இராமாயணம்  திரும்ப  திரும்ப  கேட்கும்  குழந்தைகளை ........இதனை  சிந்திக்கும்  குழந்தையின்  இயல்புகள்  பின்னாளில்  மிக  உறுதியாக  
ஸ்ரீ ராமரின்  பண்புகள்  அவர்களின்  மன  இயல்புகளை  மாற்றி  உத்தம  பண்புகளின் உறைவிடமாக்கும்.  ( நமக்கும்  கூட ......)

No comments:

Post a Comment