Thursday, September 4, 2014

பெரியவா  தொட்ட  தீர்த்தம் :


பெரியவாளிடம் மிகுந்த அன்பு கொண்டு ஒரு அம்மா, தாமிரபரணியில் நீராடிக் கொண்டிருந்தபோது, "பெரியவாளுக்கு தாமிரபரணி தீர்த்தம் கொண்டு போய் குடுக்கலாமே! புண்யநதி தீர்த்தம்...ன்னா ரொம்ப சந்தோஷப் படுவாளே!" என்று எண்ணி, திருநெல்வேலி பாத்ரக்கடையிலிருந்து ஒரு சொம்பு வாங்கி, நதி நீரை நிரப்பி மேலே சீல் பண்ணி வைத்தாள். 

அவருடைய சித்தப்பாவோ கைகொட்டி சிரித்தார், "அடி அசடே! இந்த தீர்த்தத்த எப்போ பெரியவாகிட்ட குடுக்கப் போறே? அதுவரைக்கும் இந்த ஜலம் கெடாம இருக்குமா? புழு நெளிய ஆரம்பிச்சுடும் அதெல்லாம் இந்த ஜலம் கெடாது. சித்தப்பா, சரி சரி. ஒன்னோட நம்பிக்கையை நான் ஏன் கெடுக்கணும்?”.

சோதனையாக ரெண்டு மாசம் கழித்துத்தான் பெரியவா தர்சனத்துக்கு போக முடிந்தது. மனஸ் "திக் திக்" என்று அடித்துக் கொண்டிருந்தது, திருநெல்வேலி போயிருந்தேன். தாமிரபரணி தீர்த்தம் கொண்டு வந்திருக்கேன்” தொண்டர் ஒருவர் சொம்பின் மேல் மூடியை திறந்து பெரியவா" பக்கத்தில் வைத்தார்.

"பரமேஸ்வரா, என்னைக் காப்பாத்து" அந்த அம்மாவின் மனஸ் பிரார்த்தித்தது.

பெரியவா" சொம்பிலிருந்து ஒரு அரை டம்ளர் எடுத்து தன் கமண்டலுவில் விட்டுக் கொண்டு, ஆசமனமும் பண்ணினார் ! அப்பாடா, நிச்சயம் தண்ணீர் கெடவில்லை என்ற நம்பிக்கை. ஒரு சிட்டிகை போட்டு, தொண்டரிடம் மீதி சொம்பு ஜலத்தை பிரசாதமாக அந்த அம்மாவிடம் தரச் சொல்லி உத்தரவானது.

அம்மாவுக்கோ பரம சந்தோஷம், ஆறு மாசம் கழித்து, அந்த சித்தப்பா வந்தார். ஸ்வாமி மாடத்தில் அந்த சொம்பு, "அடடா, இன்னுமா வெச்சிண்டிருக்கே? அட, பைத்தியம்! கொட்டு. கொட்டு. ஒடனே கொட்டிடு” பெரியவா ப்ரசாதமா குடுத்தது என்பதால், பூஜை மாடத்தில் வைத்திருந்த சொம்பை எடுத்துக் கொண்டு போனார் சித்தப்பா, ஒரு பெரிய பாத்ரத்தில் மீதி ஜலத்தை கொட்டினார்.

பாதி ஜலம்! மீதி புழுக்கள்! என்று எதிர்பார்த்தார். ஆச்சர்யம்! ஸ்படிகம் போல் இருந்தது ஜலம், "சித்தப்பா, ஆச்சர்யபடாதீங்கோ! பெரியவா கை பட்ட தீர்த்தம்! தலைமுறைக்கும் அப்பிடியே இருக்கும்."

பெரியவா" திருவுருவப் படத்தின் முன் அந்த அம்மா கை கூப்பி நிற்க, பக்கத்தில் சித்தப்பாவும் கைகூப்பி நின்றார்!

பின்னே, தீர்தத்தை தொட்டது நம்ம உம்மாச்சி தாத்தாவாச்சே!!!

No comments:

Post a Comment