Friday, September 5, 2014

பெரியவா.....குழந்தை......ஐஸ்கிரீம்:



சின்ன அட்டை டப்பாவிலிருந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது, ஒரு குழந்தை. அந்தச் சமயத்தில், பெரியவாள் அதன் பக்கமாகப் போனார்கள்.

”பெரியவா… ஐஸ்கிரீம் சாப்பிடறேளா?” விகல்பமில்லாமல் குழந்தை கேட்டது.
“அப்படீன்னா என்னன்னே எனக்குத் தெரியாது… அது வேண்டாம்” என்றார், பெரியவாள்

குழந்தை முகம் சுண்டிப் போனது. அதை கவனித்த பெரியவாள் கேட்டார்கள், “ஐஸ்கிரீம் எனக்குதான் வேண்டாம்னேன். வேற ரெண்டு குழந்தைக்கு வாங்கித் தரயா?

”ஊம்ம்ம்” என்றது குழந்தை சந்தோஷத்துடன்.

ஸ்ரீ மடத்தில் துப்புரவுப் பணி செய்யும் வேலைக்காரர்களின் இரண்டு குழந்தைகள் பக்கத்தில் இருந்தன. அவர்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தது, முதல் குழந்தை.

மூன்று குழந்தைகளுமாக ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் பார்த்துத் தொண்டர்கள் மகிழ்ந்தார்கள், அவர்களிடமிருந்து விஷயத்தைத் தெரிந்து கொண்டு பெரியவாளும் சந்தோஷப்பட்டார்கள்.


No comments:

Post a Comment